Translate

Thursday 29 October 2015

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,, விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!???

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,,
விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!???
இந்த விஷயம் சற்று சுவாரசியமானது...!!!
அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும்.
அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும். சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும்.
சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள்.
எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர்.
இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது.
சரியாகப்பார்த்தால்,
"காகம் கரைந்தால் விருந்தினர் வந்துள்ளார்" ,,,
என்றுதான் வந்திருக்க வேண்டும்.

L - போர்டு (LLR)லைசென்ஸ் வாங்குவது எப்படி.?

L - போர்டு (LLR)லைசென்ஸ் வாங்குவது எப்படி.? அதன் முக்கியத்துவம் என்ன.?
டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முதல் படியே பழகுனர் உரிமமாகும். அதாவது எல் போர்ட் மாட்டிக் கொண்டு உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் எல்எல்ஆர் எனப்படும் பழகுனர் உரிமம் பெற வேண்டும்.
பொதுவாக எல்எல்ஆர் பெறுவது என்பது ஏதோ மலையை தூக்கும் வேலை என்று நினைக்காதீர்கள். குறைந்தது ஒரு நாள் முதல் 2 நாட்களுக்குள் முடிந்து விடும் வேலை தான்.
நேரில் சென்று எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு…
எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் 16 முதல் 18 வயது உடையவர்களாக இருப்பின் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை ஓட்ட விண்ணப்பிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க விண்ணப்பிக்க முடியும். 20 வயது நிரம்பியவர்கள் கனரக வாகனங்களை இயக்கவும் விண்ணப்பிக்கலாம்.
வயது குறித்த சந்தேகம் தீர்ந்து விட்டதா இப்போது எல்எல்ஆர் பெற தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அதாவது உங்களது இருப்பிட முகவரிக்கு ஒரு சான்றாக, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், எல்ஐசி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் கட்டண ரசீது, அரசு ஊழியராக இருப்பின் வருமானச் சான்று போன்றவைற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக அளிக்கலாம்.
அடுத்ததாக வயது ஆதாரத்துக்கு சான்றிதழ்…
இதில் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பான் கார்டு, இது எதுவும் இல்லாத பட்சத்தில் சிவில் சர்ஜன் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் அளிக்கும் வயது சான்று அல்லது நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று போன்றவற்றில் ஒன்றை அளிக்கலாம்.
4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் மேற்கூறிய ஆவணங்களின் நகல் மற்றும் அசல்களை எடுத்துக் கொண்டு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு விண்ணப்பம் 1 மற்றும் 2ஐ பூர்த்தி செய்து மேற்கொண்ட ஆவணங்களையும், புகைப்படங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இரு சக்கர வாகனம் அல்லது கார் ஓட்ட பழகுநர் உரிமம் பெற ரூ.60ம், இரண்டுக்கும் சேர்த்து எல்எல்ஆர் எடுப்பதாக இருந்தால் ரூ.90ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.(நியாமாக)
விண்ணப்பம் வழங்கப்பட்ட அன்றோ அல்லது வேறொரு நாளிலோ விண்ணப்பதாரருக்கு மிக எளிய தேர்வு நடைபெறும். அதாவது போக்குவரத்து விதிகள் குறித்து எளிய கேள்விகள் கேட்கப்படும். இதில் 10வது வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்களுக்கு எழுத்து மூலமாகவும், பத்தாவது படிக்காதவர்களுக்கு வாய்மொழியாகவும் தேர்வு நடத்தப்பட்டு, 10க்கு 6 மதிப்பெண் எடுத்தால் அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
தேர்வு முடிவு வெளியாகி அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் அன்றைய தினமே எல்எல்ஆர் கிடைத்து விடும். இது நீங்கள் வாகனத்தை ஓட்ட கிடைக்கும் தாற்காலிக லைசென்ஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எல்எல்ஆர் பெற்று சுமார் 1 மாதத்துக்குள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எல்எல்ஆர் பெற்று 6 மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெற்று விட வேண்டும். ஒரு வேளை அதற்குள் பெறவில்லை என்றால், எல்எல்ஆர் காலாவதியாகிவிடும்.
இதுவே நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதாக இருந்தால்….
http://tnsta.gov.in/transport/llrTransactionMenu.do
என்ற இணையதள இணைப்பில் சென்று உங்களது விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்துவிட்டு, உங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அப்பாயின்மெண்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட நாளில் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் நேரில் சென்று கட்டணத்தை செலுத்தி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் எல்எல்ஆர் கிடைத்துவிடும்.
அதன்பிறகு லைசென்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .

ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .

பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்.

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் .

இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?
----------------------------------------------------------------
>>தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது
>>இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.
>>முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?
>>முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
>>சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்துஅமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.
>>எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
>>ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
>>எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது…..!
>>சம்மணம் இட்டு சாப்பிட்டால் கெளரவ குறைவு என்று எண்ணிவிடாதீர்கள்.
>>உங்கள் உடல் நலத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்..!
>>சிந்தித்து செயற்பட்டால் நோயில்லாமல் வாழலாம்..!

எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது?

எதற்காக உணவு தானியங்கள் பாலிஷ் போடப்படுகிறது?
அப்படியானால் கிழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை கொஞ்சம் கவனியுங்கள்.
இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்து கொள்ள முடியாது.
அடுத்த பகுதியான Bran என்பதில் தான் என அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன.
இந்த பகுதி பாலிஷ் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டப்படுகிறது.
அடுத்த பகுதி தான் கடைசியில் விற்கப்படும் சிறு தானியங்கள்.
இந்த நெல்லை மீண்டும் மண்ணில் விளைவிக்க உதவும் பகுதி தான் Germ.
பாலிஷ் என்ற பெயரில் இந்த Bran என்னும் பகுதி நீக்கப்படுகிறது அரிசியில் இருந்து நீக்கப்படும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே???
google search சென்று Bran products என்று தேடி பாருங்கள்.
ஒரு கிலோவில் இருந்து பகுதியை கொண்டு மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கபடுகிறது.
இப்படி பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை உண்பதால் தான் சக்கரை நோய், மூட்டு வலி போன்ற நவீன கால நோய்கள் மனிதனை பிடித்து ஆட்டுகின்றன என்பது தான் உண்மை.
எதற்காக இவ்வாறு பாலிஷ் போடபடுகிறது என்று உற்று நோக்கினால் இரண்டே இரண்டு காரணங்கள் தான் நண்பர்களே.
முதலாவது மேலிருக்கும் உமியை மட்டுமே நீக்குவது சற்று வேலை அதிகம், இரண்டாவது உமியை மட்டும் நீக்கி வைத்தால் இந்த தானியங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயன்படுத்தி விட வேண்டும்.
இல்லையெனில் வண்டுகளும் சில பூச்சிக்களும் வந்து விடும். இங்கு நாம் சற்று உற்று கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.
இங்கு பூச்சிகள் வருவதை தடுப்பதற்காக பாலிஷ் போட படுவதில்லை. மாறாக பூச்சிகள் வராமல் இருந்தால் மட்டுமே வியாபாரிகளால் அதிக நாள் இந்த தானியங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முடியும்.
இரண்டாவது உங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்துவதற்கான ஒரு தருணம், ஓர் அறிவு என்று, இரண்டு அறிவும் என்றும் மனிதனால் சொல்ல கூடிய பூச்சிகள் மற்றும் வண்டுகளுக்கு தெரிகிறது
பாலிஷ் போடப்பட்ட தானியங்களில் நாம் உண்பதற்கான சத்துக்கள் எதுவும் இல்லை என்பது. அதனால் இவற்றை அவை சாப்பிடுவது இல்லை.
ஆனால் ஆறறிவு என்று ஆர்பரித்து கொண்டிருக்கும் நாம் தான் சிலரின் சுயநலன்களுக்காக சத்துக்கள் நீக்கப்பட்ட பாலிஷ் போடப்பட்ட சிறு தானியங்களை வாங்கி உண்கிறோம்.
மேலே குறிப்படப்பட்டுள்ள அத்தனை சத்துகளும் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சிறு தானியங்கள் சாப்பிட முற்பட்டால், நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒன்று கட்டாயம் பாலிஷ் போடாத, உமி மட்டும் நீக்கப்பட்ட சிறு தானியங்களே.
இதனை கண்டுபிடிப்பதும் மிக எளிது. பாலிஷ் போடாத எந்த ஒரு சிறு தானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. மாறாக அந்தந்த தானியதிற்கே உரிய வண்ணங்களில் மட்டுமே காணப்படும்.

குருச்சேத்திரப் போர் பிரம்மாண்டமான போர் வியுகங்கள் 

குருச்சேத்திரப் போர் பிரம்மாண்டமான போர் வியுகங்கள் 

மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..

40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.இதை பிரமாண்டமான திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)

மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது

படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்லியனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருஸ்ணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அஸ்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி

பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
தமிழ் நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி.

தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.